Saturday, October 30, 2010

மாப்பு...பக்கத்து இலையில் பாயாசத்தை ஊத்து........

நாம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் ஒன்று நம்ம வீட்டு திருமண விழாக்கள்.

எனக்கும் திருமண விழாக்களில் கலந்து கொள்வது மிகவும் பிடித்த விசயம்.

தூரத்து சொந்த பந்தம், மாமா மச்சான் கல்யாணம்,நம்ம கூட பிறந்த அண்ணன், தம்பி, அக்கா, தங்கை கல்யாணம, என் நண்பர்கள் கல்யாணம் என ஒன்று கூட விடமா கலந்து கொள்வேன்.

வெளியூர் திருமண விழாக்கள் என்றால் எந்த சாக்கு போக்கு சொல்லாமல் முடிந்த மட்டும் கலந்து கொள்வேன்.

உள்ளூர் திருமண விழாக்கள் அதுவும் close realtives என்றால் இந்த மொக்க ராசா ஓடி ஆடி வேலை செய்வது வழக்கம். திருமண முதன் நாள் நண்பகல் வேளையில் கல்யாண மண்டபம் புகுந்து முதல் வேலையாக சமையில் அறையில் என்ன நடக்கிறது என்று கவனிப்பது என் பழக்கம்.

அதானல் தான் என்னவோ கல்யாண சமையலை கவனிக்கும் பொறுப்பு பொதுவாக என்னிடம் வந்துவிடும்.சமையல் வேலை ஆட்கள் கேட்கும் அரிசி, பருப்பு, மளிகை, காய்கறிகள் , எண்ணைய் மற்றும் கல்யாண பந்தி அனைத்தையும் கவனித்து கொள்வேன்.

திருமண விழாக்களில் கல்யாண சாப்பாடு நன்றா இருக்க வேண்டும் மேலும் விழுந்து,விழுந்து உபசரிக்க வேண்டும்,இல்லையென்றால் என் தென் தமிழக மக்கள் கல்யாண வீட்டாரை தங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்வது வழக்கம்.சில சமயம் மண்டபத்திலேயே கட்டி உருண்டு சண்டை போடுவார்கள்.

அதானல் தான் கல்யாண வீட்டார் கடன,உடன வாங்கி சீரும் , சிறப்புமாக கல்யாணத்தை முடிக்கிறார்கள் போலும்....

இந்த சொந்த பந்தை சரி செய்ய இல்ல அவர்கள் முன் தங்கள் வசதியை காட்ட இந்தியாவில் உள்ள மொத்த மக்களும் கல்யாணத்திற்க்காக 36,000 கோடி ஒரு வருடத்திற்கு செலவு செய்கிறார்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது. நம்புங்கள் நண்பர்களே நகை,ஆடை,மைக்&சீரியல் செட்,சாப்பாடு,வாகன வசதி, அலங்காரம் மற்றம் சில ஆடம்பர செலவுகள் சேர்த்து 36,000 கோடி அம்மாடியோவ்!!!

எந்த டுபுக்கு டா சொன்னான் இந்தியா ஏழை நாடு என்று ??

நான் சொல்ல வந்த விசயம் வேறு .... கல்யாண பந்தியில் மக்களின் சாப்பாடு இரசனையை எழுத தனி பதிவு வேண்டும்.சில பேர் பாயாசத்தில் அப்பளம்,வடையை கலந்து உருப்....உருப் என்று குடிப்பது வழக்கம்.

அன்னைக்கு அப்ப்டிதான் ஒருத்தன் பாயாசத்தில் ஜீலேபியை பிச்சு போட்டு , கூழ் மாதிரி ஆக்கி வழித்து வழித்து இலையை துடைத்து கொண்டிருந்தார்.
டேய் இது என்னடா டேஸ்ட் என்று கேட்க மனம் எத்தனித்தது.மனிதர்களுக்கு வெவ்வெறான குண்ங்கள் போல் வெவ்வெறான சுவைகள்....

பந்தி முடித்து இலை எடுக்கும் போது நான் கவனித்த விசயம் .... சாப்பாட்டை வீணாக்குவது, இலையில் போடப்பட்ட உணவுகள் பெரும்பாலும் பாதி சாப்பிடாமல் குப்பையில் வீசப்படுகிறது.

25 கிலோ அரிசி வாங்கி சாதம் சமைத்தால் குறைந்தது 4 கிலோ அரிசி சாதம் குப்பையில் வீசப்படுகிறது. ஒரு கல்யாண்த்திற்க்கே இவ்வள்வு என்றால் முகூர்த்த நாள் அன்று 50 திருமணங்கள் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம் 200 கிலோ சாதம் வீணாக குப்பையில் வீசப்படுகிறது.உண்மையில் இந்த எண்ணிக்கை கூடும்.

office -ல் அடிக்கடி மதிய உணவுக்கு ஹோட்டலை தேடி செல்லவது உண்டு பல சமயம் dutch treat போவதுண்டு (அர்த்தம்-உன் சாப்பாட்டுக்கு நீ pay பண்ணிக்கோ என் சாப்பாட்டுக்கு நான் pay பண்ணிக்கிறேன்)

அங்கெயும் என் மனதை பாதித்த விசயம் உணவை வீணாக்குவது ,சில சமயம் கெட்ட கோவம் வந்து நண்பர்களை திட்டுவது உண்டு. நான் சாப்பாட்டு தட்டையோ இலையோ கறிவேப்பிலை கூட விடாமல்
துடைத்து வழித்து விடும் ரகம்.


இங்கே உள்ள வீடியோவை பாருங்கள் .



அன்னை தெரசா மாதிரி நம்மால் எதுவும் செய்ய முடியது, இல்ல செ குவேரா மாதிரி அராசங்கத்தை எதிர்த்து புரட்சி செய்ய நிச்சயம் முடியாது.அவ்வள்வு ஏன் லஞ்சம் கொடுக்காமல் ஒரு சான்றிதழ் கூட வாங்க முடியாது, இப்படி பல முடியாது இருந்தாலும் , நம்மால் முடிந்த ஒரே நல்ல காரியம். நாம் சாப்பிடும் உணவை வீணாக்காமல் இருப்பதே.
இதை நாமும் கடை பிடிப்போம் நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் எடுத்து சொல்வோம்.

12 comments:

  1. நானும் மொக்க போடுவேன் ..!!

    ReplyDelete
  2. ////மேலும் விழுந்து,விழுந்து உபசரிக்க வேண்டும்,இ //

    விழுந்து விழுந்து உபசரிக்கரதுனா என்னங்க...?

    ReplyDelete
  3. //நாம் சாப்பிடும் உணவை வீணாக்காமல் இருப்பதே.
    இதை நாமும் கடை பிடிப்போம் நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் எடுத்து சொல்வோம். ////
    உண்மைதாங்க ., கல்யாண விழாக்களில் உண்மைலேயே உணவுப்பொருட்கள் வீணாவது கவலைக்குரிய விஷயம்.. நானும் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன் .. இந்த மாதிரி வீணாக்காமல் இருப்பது நல்லது ..

    ReplyDelete
  4. ///சில பேர் பாயாசத்தில் அப்பளம்,வடையை கலந்து உருப்....உருப் என்று குடிப்பது வழக்கம்.///
    உருப்....உருப்.. ha ha haa

    ReplyDelete
  5. நம்மால் முழுமையாக கடைபிடிக்க வேண்டிய விசயத்தை எளிமையான சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  6. அங்கெயும் என் மனதை பாதித்த விசயம் உணவை வீணாக்குவது ,சில சமயம் கெட்ட கோவம் வந்து நண்பர்களை திட்டுவது உண்டு.


    ...a good message. உங்கள் ஸ்டைல்ல நல்லா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  7. நல்ல விஷயம்தான். அருமையான பகிர்வு..

    ReplyDelete
  8. இன்னுமொரு விஷயம். கல்யாண வீடுகளில் சிலர் சமையலை காண்ட்ராக்ட் விட்டுவிடுகின்றனர். அவர்கள் சாப்பிடுபவரிடம் எதையும் கேட்காமலேயே சாப்பாடு போட்டு விடுகின்றனர். இதனாலும் சாப்பாடு வீணாகிறது.

    ReplyDelete
  9. //மாப்பு...பக்கத்து இலையில் பாயாசத்தை ஊத்து........///


    சரியான தலைப்பு ஹிஹி ......கல்யாண வீடல்ல இருந்து அப்புடியே பதிவு போடுறிங்க போல

    ReplyDelete
  10. கலகலப்பு.

    நீங்க நடத்துங்க...

    ReplyDelete